நீலகிரி : நீலகிரியில் கடும் குளிரினால் புற்கள் கருகுவதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளுக்கான தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரியில் கடும் குளிரினால் புற்கள் கருகுவதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளுக்கான தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கடும் உறைபனி நிலவுவதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் தேயிலைச் செடிகள் என அனைத்தும் பனி பொழிவு காரணமாக கருகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இதை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் கொண்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும், பனி பொழிவு அதிகம் காணப்படுவதால் புல்வெளிகள் கருகி உள்ளதால் இங்கு இயற்கையாக வளரும் புற்களை உணவாக உண்டு வாழும் கால் நடைகள் போதிய உணவு கிடைக்காமல் உள்ளது.
தொடரும் பனி பொழிவு காரணமாக வனப்பகுதிகள், தாவரங்கள் பெருமளவு கருகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரம் புற்கள் பற்றாக் குறைகாரணமாக கடைகளில் தீவனங்களை வாங்கி கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கடும் உறைபனி நிலவுவதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் தேயிலைச் செடிகள் என அனைத்தும் பனி பொழிவு காரணமாக கருகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இதை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் கொண்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும், பனி பொழிவு அதிகம் காணப்படுவதால் புல்வெளிகள் கருகி உள்ளதால் இங்கு இயற்கையாக வளரும் புற்களை உணவாக உண்டு வாழும் கால் நடைகள் போதிய உணவு கிடைக்காமல் உள்ளது.
தொடரும் பனி பொழிவு காரணமாக வனப்பகுதிகள், தாவரங்கள் பெருமளவு கருகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரம் புற்கள் பற்றாக் குறைகாரணமாக கடைகளில் தீவனங்களை வாங்கி கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர்.