பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 -ம் தேதி அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 -ம் தேதி அரசு விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஏற்கெனவே ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போல, 12 மற்றும் 13 -ம் தேதிகளும் சனி மற்றும் ஞாயிறு ஆக உள்ளதால் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஜனவரி 14 -ம் தேதி மட்டும் விடுமுறை இல்லாமல் இருந்தது. வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர வசதியாக, ஜனவரி 14 -ம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 12 -ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை ஆகும்.
மேலும், ஜனவரி 14 -ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9 -ம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஏற்கெனவே ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போல, 12 மற்றும் 13 -ம் தேதிகளும் சனி மற்றும் ஞாயிறு ஆக உள்ளதால் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஜனவரி 14 -ம் தேதி மட்டும் விடுமுறை இல்லாமல் இருந்தது. வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர வசதியாக, ஜனவரி 14 -ம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 12 -ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை ஆகும்.
மேலும், ஜனவரி 14 -ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9 -ம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.