கோவை : அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக்கூடங்கள் திருவள்ளுவர் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை : அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக்கூடங்கள் திருவள்ளுவர் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 16 -ம் தேதி அனுசரிக்கப்படும் திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 -ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அன்று மட்டும் மூடப்படுகின்றன.
இதன் படி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக்கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுகூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.