கோத்தகிரியில் டிஜிட்டல் மறு நில அளவை பணி துரிதம் : தயார் நிலையில் புதிய சர்வே கற்கள்

நீலகிரி : கோத்தகிரியில் இரண்டாம் கட்டமாக 'டிஜிட்டல் சர்வே' பணிகள் நடந்துவரும் நிலையில், நிலத்தில் பதிப்பதற்காக, புதிய 'சர்வே' கற்கள் தயார் நிலையில் உள்ளன.


நீலகிரி : கோத்தகிரியில் இரண்டாம் கட்டமாக 'டிஜிட்டல் சர்வே' பணிகள் நடந்துவரும் நிலையில், நிலத்தில் பதிப்பதற்காக, புதிய 'சர்வே' கற்கள் தயார் நிலையில் உள்ளன. 

நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முதன்முறையாக 'டிஜிட்டல்' முறையில் சர்வே செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கோத்தகிரியில் முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்பணியைத் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில், அதிநவீன கருவிகளை கொண்டு மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் கோவிந்தசாமி மேற்பார்வையில் நில அளவை ஆய்வாளர் உதயகுமார் தலைமையில், 34 அளவையர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கோத்தகிரி தாலுகாவில் சர்வே கற்கள் காணாமல் போன இடங்களிலும், தாலுகா வரைபடத்தில் உள்ள நிலங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 



ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாவது கட்டமாக, சர்வே கற்கள் இல்லாத இடங்களில் புதிய கற்கள் பதிக்கப்பட்டு, நிலம் வரைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சங்கிலி மற்றும் டேப் மூலம் சர்வே செய்யப்பட்ட நிலையில், முறையாக நிலத்தை அளக்க முடியாத நிலை இருந்தது. டிஜிட்டல் முறையில் மறு அளவை செய்யப்பட்டுள்ளதால், கோத்தகிரி தாலுகாவில், 15 வருவாய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதிலும், அந்தந்த நிலங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் நில உரிமையாளர்களுக்கு, நிலத்தின் துல்லிய தன்மை தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக நிறைவடைந்துள்ள பணிகளை, அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஏற்கனவே ஆய்வு செய்து சென்றுள்ளார். டிஜிட்டல் முறையில் நில அளவை செய்வதற்கு, நில உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருவதால், இரண்டாம் கட்ட டிஜிட்டல் மறு நில அளவை பணி முழுமைப்பெற காலதாமதம் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...