கோவை : மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பது அவருடைய மரணத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கோவை : மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பது அவருடைய மரணத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மத்திய சிறையில் உள்ளார். இவர் நேற்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

இதையடுத்து, இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இறந்த ராமசாமியின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இவரது உடலை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆகையால், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா என சந்தேகம் நிலவி வருகிறது.