கோவை : சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை முன்னரே தடுப்பதற்காக உளவுத்துறையினர் இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கோவை : சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை முன்னரே தடுப்பதற்காக உளவுத்துறையினர் இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோலவே, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்தும், கேரள அரசைக் கண்டித்தும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சிங்காநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பங்கள் மற்றும் கொடி சேதப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவை முகநூலில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பிரச்சனைகள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கோவை உள்ளிட்ட தமிழக - கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோலவே, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்தும், கேரள அரசைக் கண்டித்தும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சிங்காநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பங்கள் மற்றும் கொடி சேதப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவை முகநூலில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பிரச்சனைகள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கோவை உள்ளிட்ட தமிழக - கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.