திருப்பூரில் பொங்கல் தொகை வழங்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் : கோடாங்கிபாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மணிக்கணக்காக காத்துக்கிடப்பதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர் : கோடாங்கிபாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மணிக்கணக்காக காத்துக்கிடப்பதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் அனைத்து பகுதிகளிலுள்ள நியாய விலைகடைகளிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில், திருப்பூர், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், பொங்கல் தொகை கொடுக்க தொடங்கிய அன்று, 100 பேருக்கு கொடுத்தனர். மறுநாள் வந்து கடையை திறந்தவர்கள் இருவருக்கு வழங்கிய பின் சாப்பிடச் சென்றுவிட்டனர். அதன் பிறகு வரவே இல்லை என அப்பகுதி பெண் ஒருவர் கூறினார். 

இதையடுத்து, இன்றும் மதியம் வரை நியாய விலை கடையை திறக்கப்படும் எனக் கூறியதை நம்பி கூலி வேலைக்கு செல்லும் அப்பகுதி மக்கள் வேலைக்கு செல்லாமல் காத்திருந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் வராததால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தில் ஈடுபடவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பணம் மற்றும் பரிசு பொருட்கள் தற்போது வரை வரவில்லை என்று கூறினர் 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...