திருப்பூரில் வயதான தம்பதியை தாக்கி கொள்ளை : முதியவர் பலி

திருப்பூர் : திருப்பூரில் வயதான தம்பதியினை தாக்கிக் கொள்ளையடித்த சம்பவத்தில் முதியவர் பலி மற்றும் மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் வயதான தம்பதியினை தாக்கிக் கொள்ளையடித்த சம்பவத்தில் முதியவர் பலி மற்றும் மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் தேங்காய் கள உரிமையாளர் கருப்பட்டி பழனிச்சாமி. இவரது மனைவி மாராத்தாள். கோவில்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல தேங்காய் கள பணிகளை முடித்து இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அவர்கள் தோட்டத்து மாடுகளிடம் பால் கறக்கச் சென்ற பால்காரர் வீடு திறந்து கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது கருப்பட்டி பழனிச்சாமி அடிபட்டு இறந்துள்ளார். அவரது மனைவி மாரத்தாள் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு மாரத்தாள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...