திருப்பூரில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டதால் சாலை மறியல் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூரில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டனர்.

 

திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று கூட்டுறவு அங்காடிகளில் பணம் இல்லை என பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், மீதம் உள்ள பெரும்பாலானோர் தங்களை ஏமாற்றுவதாகக் கூறி குளத்துப்புதூர் பகுதியில் பொதுமக்கள் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



அதே போலவே, ஆண்டிபாளையம் பகுதியிலும் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கே.வி.ஆர் நகரில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் போலவே, நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த சூழலில், பொதுமக்களைச் சமாதானம் செய்யப் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு அங்காடிகளின் வங்கி கணக்குகளில் நிலுவை தொகை செலுத்தப்பட்டதால் மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...