திருப்பூர் : ஆன்லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் புதிய செயலியை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று தொடக்கி வைத்தார்.
திருப்பூர் : ஆன்லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் புதிய செயலியை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று தொடக்கி வைத்தார்.
இணையதளத்தின் மூலம் தனி நபர் நன்னடத்தை, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டில் வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு போன்ற நான்கு வகையான சான்றினை பெற முடியும். இதற்கு தனி நபர் நன்னடத்தை சான்று வேண்டுமானால் ரூ.500, தனியார் நிறுவனங்கள் வேலையாட்களுக்கான நன்னடத்தை சான்று பெற ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நேற்று தொடக்கி வைத்தார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்தலாம். திருப்பூர் மாவட்டத்தில் சான்று பெற தேவையுள்ளவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இணையதளத்தின் மூலம் தனி நபர் நன்னடத்தை, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டில் வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு போன்ற நான்கு வகையான சான்றினை பெற முடியும். இதற்கு தனி நபர் நன்னடத்தை சான்று வேண்டுமானால் ரூ.500, தனியார் நிறுவனங்கள் வேலையாட்களுக்கான நன்னடத்தை சான்று பெற ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நேற்று தொடக்கி வைத்தார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்தலாம். திருப்பூர் மாவட்டத்தில் சான்று பெற தேவையுள்ளவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.