கோவையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டு சிறை

கோவை : கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு வழக்கில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் காந்தி என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரது வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் காந்தியின் மனைவி வசந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3,30,000 மதிப்பிலான 22 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கின் குற்றவாளிகள், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அசோக், நாகராஜ், கோவை பன்னிமடையைச் சேர்ந்த சந்தீப், சின்னதடாகத்தை சேர்ந்த மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் மீது, சாலையில் சென்று கொண்டிருந்த சதாதேவன் என்ற முதியவரை மிரட்டி ரூ. 2,000 வழிப்பறி செய்த வழக்கும் பாய்ந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு வழக்கிற்கான தண்டனையை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கியது. அதில், பாலக்காட்டை சேர்ந்த அசோக், நாகராஜ் மற்றும் பன்னிமடையைச் சேர்ந்த சந்தீப், சின்னதடாகத்தை சேர்ந்த மணி ஆகிய நால்வருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...