கோவை : வாலாங்குளம், பெரியகுளம் உள்பட 3 குளங்களை மறுசீரமைப்பதற்கான டெண்டர் வரும் 10-ம் தேதி நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவை : வாலாங்குளம், பெரியகுளம் உள்பட 3 குளங்களை மறுசீரமைப்பதற்கான டெண்டர் வரும் 10-ம் தேதி நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர்குளம், நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. அதோடு, இந்தக் குளங்களைச் சுற்றிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பூங்காக்கள் மேம்படுத்துதல், நடைபாதை போன்ற திட்டப் பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தமாணி குளம் உள்ளிட்ட 3 குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, வரும் 10-ம் தேதி டெண்டர் நடத்தப்படுகிறது. ரூ. 161.5 கோடியில், கரைகளைப் பலப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்தல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர்குளம், நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. அதோடு, இந்தக் குளங்களைச் சுற்றிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பூங்காக்கள் மேம்படுத்துதல், நடைபாதை போன்ற திட்டப் பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தமாணி குளம் உள்ளிட்ட 3 குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, வரும் 10-ம் தேதி டெண்டர் நடத்தப்படுகிறது. ரூ. 161.5 கோடியில், கரைகளைப் பலப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்தல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.