திருச்சி உள்பட 16 விமான நிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

கோவை : திருச்சி, விசாகப்பட்டினம் உள்பட 16 விமான நிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை : திருச்சி, விசாகப்பட்டினம் உள்பட 16 விமான நிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. காபி குடிக்க பிளாஸ்டிக் கப்பும், உணவு உண்ணுவதற்கு பிளாஸ்டிக் ஸ்பூனும், இளநீர் சாப்பிடுவதற்கு கூட ஸ்டிரா (straws) என சிறு,சிறு விஷயங்களில் தொடங்கி, பெரிய பெரிய விழாக்கள் வரையிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு, நமது வாழ்க்கையில் ஒன்றியே பயணிக்கிறது. இந்தப் பிளாஸ்டிக் பயன்பாட்டினால், நமக்கான வேலைகள் எளிதாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்திய விமானநிலைய அதிகாரச்சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, நாட்டில் உள்ள 16 விமானநிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அந்தந்த விமான நிலையங்களின் இயக்குநர்களுக்குக் கடந்த 4-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, இந்தூர், போபால், அகமதாபாத், புவனேஸ்வர், திருப்பதி, விஜயவாடா, டேராடூன், சண்டிகர், வதோதரா, மதுரை, ராய்பூர், விசாகப்பட்டினம், புனே, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய விமானநிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்திய விமானநிலைய அதிகாரச்சபையின் செய்தித் தொடர்பாளர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "அனைத்து விமான நிலையங்களிலும் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த இந்திய விமானநிலைய அதிகாரச்சபை முயற்சி செய்து வருகிறது. எங்களது முக்கிய நோக்கம், சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, மாற்றுப் பொருட்களை பயன்படுத்தச் செய்வதே ஆகும். ஆகவே, குப்பைத் தொட்டிகளில் வைக்கப்படும் பைகள் கூட, பிளாஸ்டிக் மாற்றுப் பொருளைத் தான் பயன்படுத்துகிறோம். மேலும், விமான நிலைய வளாகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் இயந்திரங்களைப் பொருத்தியுள்ளோம்," என்றார். 

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான இந்திய விமானநிலைய அதிகாரச்சபையின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...