கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் : 500 -க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 



தொழிற்சங்கங்கள் சார்பில், பொதுப்பணித்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 



கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, எம்.எல்.எப்,எஸ்.டி.பி.ஐ,.யின் கிளை அமைப்பான எஸ்.டி.டி.யூ,சி.ஐ.டி.யு, மற்றும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் பணிமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்து, தொழிற்சங்களை பழிவாங்காதே, இந்திய பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனத்துக்கு விற்கும் முயற்சியைக் கைவிடு என மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். 



எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட 500 -க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 24,631 பேரை இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை போலவே, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யூ.சி, சத்துணவு அமைப்பாளர், பம்ப் ஆபரேட்டர்கள் சார்பில் கோத்தகிரி பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 70 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...