நீலகிரி : நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கான ஜனவரி மாத விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி : நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கான ஜனவரி மாத விலையினை தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் ஏலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 -ம் தேதிக்கு முன்பாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, டிசம்பர் மாத ஏலத்தின் விலை அடிப்படையில், இம்மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை தெனிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, ரூ.15.69 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையினை அனைத்துத் தொழிற்சாலைகளும் கட்டாயம் வழங்க வேண்டும். அதனை செய்யத் தவறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் ஏலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 -ம் தேதிக்கு முன்பாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, டிசம்பர் மாத ஏலத்தின் விலை அடிப்படையில், இம்மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை தெனிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, ரூ.15.69 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையினை அனைத்துத் தொழிற்சாலைகளும் கட்டாயம் வழங்க வேண்டும். அதனை செய்யத் தவறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.