கோவை : இரண்டாவது முறையாக, காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : இரண்டாவது முறையாக, காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம், பூண்டி அருகே உள்ள முள்ளங்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி (எ) சாடியம்மாள், 50. கூலி வேலை பார்த்து வரும் இவர், நேற்று மாலை, வேலைக்குச் சென்று திரும்பியவர், வழியில் இறந்து கிடந்தார்.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், காட்டு யானை தாக்கி, பலியானது தெரியவந்தது. உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே பகுதியில், ஜனவரி மாதம் 1 -ம் தேதி ஆதிவாசி ஒருவர், யானை தாக்கியதில் பலியானது குறிப்பிடத்தக்கது.