அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் : கல்கி சுப்ரமணியம் வரவேற்பு

கோவை : 134 வருட பழமையான கட்சியின், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதை கல்கி சுப்ரமணியம் வரவேற்றுள்ளார்.

கோவை : 134 வருட பழமையான கட்சியின், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதை கல்கி சுப்ரமணியம் வரவேற்றுள்ளார். 

தேசிய அளவில் புகழ்பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர் அப்சரா ரெட்டி. முதன் முதலாக கடந்த 2016 -ல் பாஜக -வில் இணைந்த அப்சரா, அதற்கு பிறகு அதே ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். 



அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இதுகுறித்து, கல்கி சுப்ரமணியம் கூறுகையில், "இது போன்ற மாற்றங்கள் திருநங்கைகள் மீது இருக்கும் சமூக களங்கத்தை உடைத்தெறியும். அங்கீகாரத்தை நிலைப்படுத்தும்," என்றார்.

அப்போது, திருநங்கைகள் அரசியலுக்கு வந்தால் மக்கள் எப்படி எதிர் வினையாற்றுவார்கள் என்று கேள்வி எழுப்பும் போது, மக்கள் எங்களை நிச்சயமாக எங்களை ஆதரித்து ஓட்டளிப்பார்கள், எனப் பதிலளித்தார். 

மேலும், பழமையான கட்சியில் இது போன்ற முயற்சிகள் எடுத்திருப்பது நல்லதொரு தொடக்கம், அதனை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...