விபத்தில் பலியான ஆயுதப்படை காவலரின் குடும்பத்திற்கு கோவையில் ரூ.30 லட்சம் விபத்து காப்பீட்டு தொகை வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி

கோவை : விபத்தில் சிக்கி பலியான ஆயுதப்படையை சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் வங்கி சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா முன்னிலையில் வழங்கப்பட்டது.


கோவை : விபத்தில் சிக்கி பலியான ஆயுதப்படையை சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் வங்கி சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா முன்னிலையில் வழங்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தவர் பெரியண்ணன் (29). இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் அதிக்‌ஷா இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2011 -ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரவு 8 மணியளவில் தர்மபுரி டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரெட்டிபட்டி பஸ் நிலையம் அருகே டிராக்டர் மோதியதில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி பலியானார். 

இதனிடையே, இவர் ஆக்ஸிஸ் வங்கியில் காவலர் பணிக்கான சம்பள கணக்கை வைத்திருந்தார். ஆக்ஸிஸ் வங்கியானது சீருடை பணியாளர்களுக்கான சம்பள கணக்கிற்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த காசோலையை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் வைத்து மறைந்த காவலரின் மனைவி சுகந்தி மற்றும் அவரது குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர். 



இந்த காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா ஐ.பி.எஸ், ஆக்ஸிஸ் வங்கியின் கோவை மண்டல தலைவர் சக்திவேல், காவல்துறை துணைத் தலைவர்கள் செந்தில்குமார் ஐ.பி.எஸ், கார்த்திகேயன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...