கோவையில் நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் சந்திக்கும் 3 நாள் கண்காட்சி தொடக்கம்

கோவை : கோவையில் நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் சந்திக்கும் 3 நாள் கண்காட்சி லீ மெரிடின் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கியது.

கோவை : கோவையில் நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் சந்திக்கும் 3 நாள் கண்காட்சி லீ மெரிடின் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கியது. 

கோவையில் அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் மற்றும் ப்ரீபெர்டு மெனிபேக்கரர் ஆப் இந்தியா இணைந்து நடத்திய ஆபரண கண்காட்சி இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் ஆபரணங்கள் உற்பத்தி, விற்பனை ஆகியவை தொடர்பான வியாபார ஆலோசனைகளும், விற்பனையும் நடைபெறும். 



புத்தாண்டையொட்டி நடைபெறும் இக்கண்காட்சி, ஏற்கனவே புனே, ஹைதராபாத், கோவா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று லீ மெரிடின் நட்சத்திர விடுதியில் தொடங்கிய கண்காட்சி வரும் 10 -ம் தேதி வரை நடைபெறும். இதில் மொத்தம் 150 நகை உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பங்கேற்றுள்ளனர். 



இதுகுறித்து அனைத்திந்திய நகை மற்றும் ரத்தினங்கள் கவுன்சில் அனந்த் பத்மநாபன் கூறியதாவது :- இந்தக் கண்காட்சி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜூவல்லரி நடத்துபவர்கள் சந்தித்து தங்களின் வியாபாரத்தை விரிவாக்கிக் கொள்ள உதவும். மேலும், நகை உற்பத்தியாளர்களுக்கும், ஜூவல்லரி முதலாளிகளுக்கும் இடையே நல்ல புரிதலையும், வர்த்தக அபிவிருத்தியும் செய்து கொடுக்கும் வாய்ப்பு அதிகம், இவ்வாறு அவர் கூறினார். 

இதுகுறித்து துணைத்தலைவர் சங்கர் சென் கூறியதாவது :- இந்தக் கண்காட்சி நகை உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான அனைத்து வர்த்தகத்துக்கும் மையம் ஆகும். இதனால் நகை உற்பத்தித் துறையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவநாகரீக நகைகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும், இந்தக் கண்காட்சி நடத்துவதன் முக்கிய நோக்கமே நகை விற்பனையை நாடு முழுவதும் அதிகப்படுத்துவதே ஆகும், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...