புதுடெல்லி : செய்திதாள்களில் பொதிந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2019 -ம் ஆண்டு ஜூலை 1 -ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி : செய்திதாள்களில் பொதிந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2019 -ம் ஆண்டு ஜூலை 1 -ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சாலையோரக் கடைகள் தொடங்கி பலசரக்கு கடைகள் வரை செய்திதாள்களில் பொட்டலமிட்டு உணவு பொருட்களை பரிமாறும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய இரண்டு ஆய்வுகளில், உணவு பொருட்கள் பொதியப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள் உணவு பொருட்களில் கலப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 13.4% உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனாலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதிமுறைகளுடன் கூடிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற 2019 -ம் ஆண்டு ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் சட்ட விரோதமாக உதிரியாகப் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலையோரக் கடைகள் தொடங்கி பலசரக்கு கடைகள் வரை செய்திதாள்களில் பொட்டலமிட்டு உணவு பொருட்களை பரிமாறும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய இரண்டு ஆய்வுகளில், உணவு பொருட்கள் பொதியப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள் உணவு பொருட்களில் கலப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 13.4% உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனாலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதிமுறைகளுடன் கூடிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற 2019 -ம் ஆண்டு ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் சட்ட விரோதமாக உதிரியாகப் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.