திருப்பூர் : ஆன்லைன் மூலம் விற்பனை செய்யக்கூடிய மருந்து வணிகத்தைத் தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : ஆன்லைன் மூலம் விற்பனை செய்யக்கூடிய மருந்து வணிகத்தைத் தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு இந்தியா முழுவதும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி இந்தியா முழுவதும் 719 மாவட்டங்களில் ஆட்சியரிடம் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் இன்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மருந்துகள் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் ரயில்நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்வதால், மருத்துவருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் போன்ற மாத்திரைகள் விற்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர். எனவே, சமுதாய சீரழிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு இந்தியா முழுவதும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி இந்தியா முழுவதும் 719 மாவட்டங்களில் ஆட்சியரிடம் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் இன்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மருந்துகள் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் ரயில்நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்வதால், மருத்துவருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் போன்ற மாத்திரைகள் விற்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர். எனவே, சமுதாய சீரழிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.