நாடெங்கும் இருசக்கர வாகனத்தில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மூத்த குடிமகன் கோவை வருகை

கோவை : உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதியவர் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கோவை : உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதியவர் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

புனேவை சேர்ந்தவர் பிரமோத் லட்சுமணன் மகாஜன் (67). விவசாயியான இவர், உடல் உறுப்பு தானம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதம் 20 -ம் தேதி புனேயில் இருந்து புறப்பட்டார். வரும் 28 -ம் தேதியுடன் பயணத்தை முடிக்கத் திட்டமிட்டு உள்ள பிரமோத், பல்வேறு மாநிலங்களைக் கடந்து 80 -வது நாளாக இன்று கோவை வந்தடைந்தார்.

 

கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார். பின்னர் நோயாளிகளுக்குத் துண்டு பிரசுரங்களை அளித்தார். மேலும், இந்த முதியவருக்குக் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களும், மருத்துவர்களும் மற்றும் பொதுமக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.

இதுகுறித்து பிரமோத் லக்‌ஷ்மனன் மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- உடல் உறுப்பு தானம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்த 10 ஆயிரம் கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த அக்டோபர் மாதம் என் பயணத்தை தொடங்கினேன். மேலும், எனது ஒரு சிறுநீரகத்தை முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு அளித்திருக்கிறேன்.

மேலும், நாட்டில் உடல் உறுப்பு தானம் வேண்டிக் காத்திருப்பு பட்டியலில் ஏராளமானவர்கள் உள்ளனர். தற்போது 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் தான் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களும் உடல் உறுப்பு தானம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...