கள்ளக்குறிச்சி : இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனிமாவட்டமாக அறிவித்தார்.
கள்ளக்குறிச்சி : இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனிமாவட்டமாக அறிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார். விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார். கள்ளக்குறிச்சி 33 -வது மாவட்டமாகத் தமிழகத்தில் உருவாக இருக்கிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக உருவாக்கப்பட இருப்பதாக அறிவித்தார். விரைவில் உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்றும் எடப்பாடி அறிவித்தார். கள்ளக்குறிச்சி 33 -வது மாவட்டமாகத் தமிழகத்தில் உருவாக இருக்கிறது.