கோவை ரயில்நிலையத்தில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2 இல் வருகிறது எஸ்கலேட்டர்.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரூ. 75 லட்சம் மதிப்பில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-ல் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படவுள்ளது.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரூ. 75 லட்சம் மதிப்பில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-ல் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படவுள்ளது.

தொழில்நகரமான கோவை மாநகருக்கு கல்வி மற்றும் வேலைக்காக அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும், ரயில் போக்குவரத்தை நம்பி இருப்பதால், கோவை மத்திய ரயில்நிலையம் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படும். இந்த நிலையில், 

கோவை மத்திய ரயில்நிலையத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-ல் எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. 



அதன்படி, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, இடதுபுறம் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு, எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயணிகளின் வசதிக்காக கோவை மத்திய ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாட்ஃபார்ம் 1-A வில் எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளன. தற்போது, பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-க்கு செல்லும் வழியில் எஸ்கலேட்டர் வசதி செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நான்கு அல்லது ஐந்து மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...