நாடு தழுவிய பந்த் எதிரொலி : கோவை மாநகரில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை

கோவை : நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என 17 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், கோவையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 10,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தில் கோவை சார்பில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. இன்று ஒரு நாள் கோவை மாநகர் பகுதிகளில் 10 ஆயிரம் ஆட்டோகள் இயக்கவில்லை," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...