கோவை : நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை : நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. இதன் காரணமாக, கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதே சமயம், கோவை மாநகர் பகுதிகளில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.