திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்து ஆதார் அட்டைகளை வீசியும், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்து ஆதார் அட்டைகளை வீசியும், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பெருமாம்பாளையம் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பகுதியில், இந்த மதுக்கடை அமைய உள்ளதால் இடத்தை மாற்றி அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும், அதே பகுதியில் மதுபானக்கடையை அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. எனவே, கோவில் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடையை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக அவர்களின் அடையாள ஆவணமான ஆதார் அட்டைகளைக் கீழே வீசியும், பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பெருமாம்பாளையம் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பகுதியில், இந்த மதுக்கடை அமைய உள்ளதால் இடத்தை மாற்றி அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும், அதே பகுதியில் மதுபானக்கடையை அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. எனவே, கோவில் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடையை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக அவர்களின் அடையாள ஆவணமான ஆதார் அட்டைகளைக் கீழே வீசியும், பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.