கோவை : பொதுமக்கள் வயரிங் வேலை செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்க வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றிய மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒப்பந்தார சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை : பொதுமக்கள் வயரிங் வேலை செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பிக்க வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றிய மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒப்பந்தார சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் முறையாக உரிமம் பெற்று வீடு, கடைகள், தொழிற்சாலைகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறது. மேலும், சங்க உறுப்பினர்கள் சின்னியம்பாளையம் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலங்களில் இணையம் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களை அணுகலாம் என வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து உதவி பொறியாளர்களிடம் கேட்கையில், "பொதுமக்கள் இணையம் மூலம் விண்ணப்பித்தால் ஆதாயம் இல்லை. இது உயர் அதிகாரிகளின் உத்தரவு," என தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எளிய முறையில் இணைப்பு பெறலாம் என அரசும் வாரியமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற வேண்டாம் என கூறி வருகின்றனர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் செய்ய வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை அகற்றி, மின்வாரிய உத்தரவை மீறி மின்சார ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் முறையாக உரிமம் பெற்று வீடு, கடைகள், தொழிற்சாலைகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறது. மேலும், சங்க உறுப்பினர்கள் சின்னியம்பாளையம் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலங்களில் இணையம் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களை அணுகலாம் என வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து உதவி பொறியாளர்களிடம் கேட்கையில், "பொதுமக்கள் இணையம் மூலம் விண்ணப்பித்தால் ஆதாயம் இல்லை. இது உயர் அதிகாரிகளின் உத்தரவு," என தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எளிய முறையில் இணைப்பு பெறலாம் என அரசும் வாரியமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற வேண்டாம் என கூறி வருகின்றனர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் செய்ய வைக்கப்பட்டிருந்த தகவல் பலகைகளை அகற்றி, மின்வாரிய உத்தரவை மீறி மின்சார ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.