மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து உதகை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

நீலகிரி : நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் மது மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் மது மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 



மது மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்ளுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நிதி ஆதாரம் இன்றி பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், கள்ளச்சாராயத்தை உட்கொள்ளுவது உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகின்றது. 



இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், உதகை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 



இந்த பேரணி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதியைச் சென்றடைந்தது. இப்பேரணியில் 100 -க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் கைகளில் மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...