கோவை : கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகளிர் சுய உதவிக் குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்குரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விற்பனை கண்காட்சிகளுக்கு பொருட்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ள கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள பெண்கள் மகளிர் திட்டம் அலுவலகம், பழைய கட்டிடம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை என்ற முகவரியிலோ அல்லது 0422-2301855 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகளிர் சுய உதவிக் குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்குரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விற்பனை கண்காட்சிகளுக்கு பொருட்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ள கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள பெண்கள் மகளிர் திட்டம் அலுவலகம், பழைய கட்டிடம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை என்ற முகவரியிலோ அல்லது 0422-2301855 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.