கோவை : மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும், மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும், மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மனிதனுக்கு தீமைகளை ஏற்படுத்தி, பல வருடங்களானாலும் மண்ணில் மக்காது இருக்கும் நெகிழிப் பையின் (பிளாஸ்டிக் பை) பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளேப்பாளையம் ஊராட்சி, காவல்துறை மற்றும் அம்பாள் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிபைகளை பொதுமக்கள் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை அம்பாள் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறுமுகை நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளின் வழியே சென்ற இந்தப் பேரணி சி.எஸ்.ஜ. தேவாலயம் முன்பு முடிவுற்றது.
இந்தப் பேரணியின் போது, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்தப் பேரணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மனிதனுக்கு தீமைகளை ஏற்படுத்தி, பல வருடங்களானாலும் மண்ணில் மக்காது இருக்கும் நெகிழிப் பையின் (பிளாஸ்டிக் பை) பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளேப்பாளையம் ஊராட்சி, காவல்துறை மற்றும் அம்பாள் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிபைகளை பொதுமக்கள் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை அம்பாள் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறுமுகை நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளின் வழியே சென்ற இந்தப் பேரணி சி.எஸ்.ஜ. தேவாலயம் முன்பு முடிவுற்றது.
இந்தப் பேரணியின் போது, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்தப் பேரணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.