கோவை : தடாகம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : தடாகம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துடியலூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பாப்பநாயக்கன்பாளையம் மேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (33). இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை முனியப்பன் கோயில் அருகே உள்ள ஒரு வீதியில் தலை நசுங்கி, ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தடாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தடாகம் போலீஸார், ஆனந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்மநபர்களால் தலையில் கல்லை போட்டு ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், இவரை கொலை செய்த மர்மநபர்கள் யார் எனத் தெரியவில்லை. அவர்களின் அடையாளம் கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தடாகம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துடியலூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பாப்பநாயக்கன்பாளையம் மேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (33). இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை முனியப்பன் கோயில் அருகே உள்ள ஒரு வீதியில் தலை நசுங்கி, ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தடாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தடாகம் போலீஸார், ஆனந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்மநபர்களால் தலையில் கல்லை போட்டு ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், இவரை கொலை செய்த மர்மநபர்கள் யார் எனத் தெரியவில்லை. அவர்களின் அடையாளம் கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தடாகம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.