50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேச்சுமொழியாகிவிடுமா..? : கவிஞர் வைரமுத்து அச்சம்

திருப்பூர் : கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப்பள்ளிகளால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்து மொழியாக உள்ள தமிழ் பேச்சு மொழியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக திருப்பூரில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திருப்பூர் : கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப்பள்ளிகளால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்து மொழியாக உள்ள தமிழ் பேச்சு மொழியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக திருப்பூரில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திருப்பூரில் வெற்றித்தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகளைப் பறைசாற்றும் வகையிலான தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 



நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசிய போது கலைஞர் கருணாநிதியுடன் கவிஞர் வைரமுத்துவுக்குமான நட்புறவைப் பற்றி பேசினார். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த கவிஞர் வைரமுத்து பலமுறை கண்ணீர் வடித்து அழுத நிகழ்வு நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் நெகிழச்செய்தது. இதைத் தொடர்ந்து, இதுவரை கவிஞர் கரங்களால் வெளியிடப்பட்ட தனது நூல்கள், இனி அவரது காலடிகளில் வைத்து வெளியிடப்படும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். 



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது :- தற்போது தமிழினமே தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை எனில், எந்த இனம் நம்பிக்கை கொள்ளும். முதலில் பெற்றோர்கள் தமிழின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெருகிவரும் ஆங்கிலவழி பள்ளிகளால், தற்போது எழுத்து மொழியாகவும், பேச்சுமொழியாகவும் உள்ள நம் மொழி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் பேச்சுமொழியாக மட்டும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழ் வழி கல்வி கற்பதும், தமிழ் மொழியைக் கட்டாயம் கற்பதும், தமிழ் மொழியின் மீது நம்பிக்கை கொள்வதும் நம் தலையாய கடமை. அதனை சட்டத்தின் மூலம் சாத்தியமாக்க முடியுமென்றால், அதன்வழி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 



முன்னதாக, தி.மு.க.வின் ஆதரவு நிகழ்ச்சிகள் பலவற்றில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டிருந்தாலும் கூட, நேரடியாக அரசியலில் வைரமுத்து ஈடுபடவில்லை. ஆனால், மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம். ஆனால், பெரியாரை உணர்ந்துகொண்ட ஒரு கவிஞர், சமூகத்தின் உண்மைகளை தைரியமாக எதிர்த்து மக்களின் இதயத்தோடு பொருந்தக்கூடிய மொழியிலே பேச உங்களைப்போன்ற ஒருவர் வேண்டும். வாளெடுத்து வாருங்கள், உங்களோடு நிற்கிறோம் எனப் பேசி சூசகமா கவிஞர் வைரமுத்துவை அரசியலுக்கு அழைத்தார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...