கோவை : மேட்டுப்பாளையத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடுகளை இழந்து தவித்து வரும் கூலி தொழிலாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடுகளை இழந்து தவித்து வரும் கூலி தொழிலாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் ஓடந்துரை பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் குடிசைகள் அமைத்து கூலித் தொழிலாளிகள் சிலர் தங்கியிருந்தனர். இதில், ஒரு வீட்டில் கடந்த 4-ம் தேதி எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த சுமார் 11 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனால், கூலித் தொழிலாளிகள் தங்களது உடைமைகளை இழந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 ரொக்கம் மற்றும் சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை, போர்வை, உணவுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் ஓடந்துரை பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் குடிசைகள் அமைத்து கூலித் தொழிலாளிகள் சிலர் தங்கியிருந்தனர். இதில், ஒரு வீட்டில் கடந்த 4-ம் தேதி எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த சுமார் 11 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனால், கூலித் தொழிலாளிகள் தங்களது உடைமைகளை இழந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 ரொக்கம் மற்றும் சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை, போர்வை, உணவுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.