திருப்பூர் : சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து உடுமலையில் கேரள அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் : சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து உடுமலையில் கேரள அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலையில் 2 பெண்களை வழிபாடு செய்ய அனுமதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையின் புனிதத்தை கெடுத்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசு உடனடியாக கேரள அரசாங்கத்தை கலைக்க உத்தரவிடக் கோரி மூணாறிலிருந்து உடுமலை வந்த கேரளா மாநில அரசு பேருந்தை மறித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துமக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரமணன் தலைமையில் 50 பேரை உடுமலை காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. கேரளா செல்லும் பேருந்துகளுக்கு உடுமலை காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலையில் 2 பெண்களை வழிபாடு செய்ய அனுமதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையின் புனிதத்தை கெடுத்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசு உடனடியாக கேரள அரசாங்கத்தை கலைக்க உத்தரவிடக் கோரி மூணாறிலிருந்து உடுமலை வந்த கேரளா மாநில அரசு பேருந்தை மறித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்துமக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரமணன் தலைமையில் 50 பேரை உடுமலை காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. கேரளா செல்லும் பேருந்துகளுக்கு உடுமலை காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.