கோவை : கோவையில் 13 வயது சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அவரது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையின் இளைய சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை : கோவையில் 13 வயது சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அவரது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையின் இளைய சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நல்ல எண்ணத்தில் தொடுதல் (Good Touch), தீய எண்ணத்தில் தொடுதல் (Bad Touch) குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தெலுங்குப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம், விழிப்புணர்வு பெற்ற 8-ம் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்கள் இருவரால் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக ஆசிரியர்கள் உதவியுடன் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, மாணவியை குழந்தைகள் இல்லத்தில் அதிகாரிகள் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சிறுமியின் தந்தை இயேசு ராஜன் (38), சித்தப்பாக்கள் இயேசு ராஜா (28), டேவிட் (23) ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தந்தை உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் டேவிட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.