திருப்பூரில் வலையில் சிக்கிய மரநாய் பத்திரமாக மீட்பு

திருப்பூர் : திருப்பூர் அருகே வலையில் சிக்கிய மரநாய் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் அருகே வலையில் சிக்கிய மரநாய் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. 



திருப்பூர் முத்தனம்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன். இவருடைய வீட்டின் அருகே தோட்டம் உள்ளதால், பெருச்சாளிகளின் தொந்தரவு அதிகமாக இருந்து வந்தது. இதனையடுத்து, அர்ஜுன் பெருச்சாளிகளை பிடிப்பதற்காக நேற்று இரவு வலை வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று வலையில் ஏதாவது பெருச்சாளிகள் சிக்கி உள்ளதா..? என்பதைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.



அப்போது, வலையில் வித்தியாசமான உயிரினம் இருப்பதைக் கண்டுள்ளார். பின்னர், இது தொடர்பாக, வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் வலையில் சிக்கியது, 3 வயது மதிக்கத்தக்க மரநாய் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, வலையில் இருந்து மீட்கப்பட்ட மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனத்துறையினர் வனப்பகுதியில் மீண்டும் விடுவித்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...