டெல்லி : ஆதார் அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆதார் அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆதார் எண்ணுடன், ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும், என்றார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர்ப்பலியை ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் உரிமம் பெறுவது போன்ற குற்றங்களை இது தடுக்கும் என்றும் அவர் விளக்கினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆதார் எண்ணுடன், ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும், என்றார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர்ப்பலியை ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் உரிமம் பெறுவது போன்ற குற்றங்களை இது தடுக்கும் என்றும் அவர் விளக்கினார்.