சபரிமலை விவகாரம் : கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்கள் மீது வழக்கு பதிவு

கோவை : சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரத்தைக் கண்டித்து கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நாம் இந்துக்கள் அமைப்பினர் 8 பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை : சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரத்தைக் கண்டித்து கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நாம் இந்துக்கள் அமைப்பினர் 8 பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சபரிமலைக்குச் செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் ஜனவரி 2 -ம் தேதி அதிகாலையில் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதையடுத்து, தமிழகம், கேரளத்தில் உள்ள இந்து அமைப்புகள் தொடர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கேரளத்தில் உள்ள இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து,கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. 

இந்நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நாம் இந்துக்கள் கட்சி சார்பில் கேரள அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். 

இதனைத் தொடர்ந்து உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்து அமைப்பின் மாவட்டத்தலைவர் கார்த்திக், இளைஞரணித் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், செயலாளர் கனகராஜ், இளைஞரணிச் செயலாளர் கௌதம் உள்ளிட்ட 8 பேரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். 

மேலும், சிங்காநல்லூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஹாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 353, 506(I) , 285 - 511 ஆகிய 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...