திருப்பூரில் கிணத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருப்பூர் : திருப்பூரில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன் (37). இவர் திருப்பூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பனியன் தொழிலாளியான இவரது மகன் அன்புச்செல்வன்(12), 7 -ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அன்புச்செல்வன் தன் நண்பர்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

வெங்கமேடு பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான அந்த பாழடைந்த கிணற்றில் குளிப்பதற்காக சென்ற அன்புச்செல்வனுக்கு நீச்சல் தெரியாது. எனவே, குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் அன்புச்செல்வனை தேடியுள்ளனர். ஆனாலு, அன்பு கிடைக்கவில்லை. 



இதனையடுத்து, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் கிணற்றில் மூழ்கிய சிறுவனை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்டுள்ளனர். அதன் பின் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...