திருப்பூர் : கேரளாவின் சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடமிட்டு வன்முறையைத் தூண்டிவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : கேரளாவின் சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடமிட்டு வன்முறையைத் தூண்டிவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா சபரிமலை கோவில் சென்று பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், சபரிமலை விவகாரத்தில் வழக்குத் தொடுத்ததும், தீர்ப்பை முதன் முதலில் வரவேற்றதும் பாஜகவினர். இந்நிலையில், தற்போது, அதனை மறுத்து வருகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்த கேரள அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டு, வன்முறையை ஏற்படுத்தி வரும் பா.ஜ.க அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா சபரிமலை கோவில் சென்று பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், சபரிமலை விவகாரத்தில் வழக்குத் தொடுத்ததும், தீர்ப்பை முதன் முதலில் வரவேற்றதும் பாஜகவினர். இந்நிலையில், தற்போது, அதனை மறுத்து வருகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்த கேரள அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டு, வன்முறையை ஏற்படுத்தி வரும் பா.ஜ.க அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.