திருப்பூர் : சிவசேனாவின் பால்தாக்கரே மரணத்தின் போது அரசு பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சியை சேர்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் : சிவசேனாவின் பால்தாக்கரே மரணத்தின் போது அரசு பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சியை சேர்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2012 -ம் ஆண்டு சிவசேனா கட்சியின் பால்தாக்கரே இறந்தார். அப்போது திருப்பூர் பூளவாடி சுகுமார் நகரில் வசித்து வரும் மகேஷ்குமார் ,மகேந்திரன் ஆகிய இருவரும் வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தை சேதப்படுத்தினர். காங்கயம் சாலையில் தனியார் உணவக விடுதி அருகே வைத்து நடந்த அச்சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடியைக் கல் வீசி உடைத்தனர்.
இது தொடர்பாக அரசுப்பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மகேஷ்குமார், மகேந்திரன் ஆகியோர் மீது தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு 2 -வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவருக்கும் பொது இடத்தில் தகராறு செய்து, ஆபாசமாகப் பேசியதற்காக 3 மாதமும், தமிழக அரசின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக தலா 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜீயாவுதின் தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு காவல் துறையினர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 2012 -ம் ஆண்டு சிவசேனா கட்சியின் பால்தாக்கரே இறந்தார். அப்போது திருப்பூர் பூளவாடி சுகுமார் நகரில் வசித்து வரும் மகேஷ்குமார் ,மகேந்திரன் ஆகிய இருவரும் வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தை சேதப்படுத்தினர். காங்கயம் சாலையில் தனியார் உணவக விடுதி அருகே வைத்து நடந்த அச்சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடியைக் கல் வீசி உடைத்தனர்.
இது தொடர்பாக அரசுப்பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மகேஷ்குமார், மகேந்திரன் ஆகியோர் மீது தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு 2 -வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவருக்கும் பொது இடத்தில் தகராறு செய்து, ஆபாசமாகப் பேசியதற்காக 3 மாதமும், தமிழக அரசின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக தலா 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜீயாவுதின் தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு காவல் துறையினர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.