விஜய மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளி : சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

விஜய மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளி எனவும், அவரது சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

விஜய மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளி எனவும், அவரது சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 

அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். 

இதையடுத்து, அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். எனவே, அவரைக் கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

இதனிடையே, லண்டனில் உள்ள விஜய மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரைத் தேடப்படும் பொருளாதார குற்றவாளி என பிஎம்எல்ஏ (PMLA) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேடப்படும் குற்றவாளி என்பவர் உள்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேலாகப் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வெளிநாடு செல்பவர் ஆவார். அதனடிப்படையில் தான் விஜய மல்லையா தேடப்படும் (அ) தப்பியோடிய பொருளாதார குற்றவாளி எனக் குறிப்பிடப்படுகிறார். 

மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளி என அறிவிப்பதன் வாயிலாக அவரது அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கப்பிரிவுக்குக் கிடைக்கும். கர்நாடகா மட்டுமல்லாமல் லண்டனில் உள்ள அவரது சொத்துக்களைக்கூட முடக்க இயலும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...