கோவை : செட்டிபாளையம் சாலையில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : செட்டிபாளையம் சாலையில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஆறுபடை நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டியனின் மனைவி அமுதா (37). இவரும், இவரது கணவரும் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு 9.30 மணியளவில் அமுதா கடையை மூடுவதற்காகப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல வந்த மர்ம நபர்கள், அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமுதா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசம் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஆறுபடை நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டியனின் மனைவி அமுதா (37). இவரும், இவரது கணவரும் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு 9.30 மணியளவில் அமுதா கடையை மூடுவதற்காகப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல வந்த மர்ம நபர்கள், அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமுதா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசம் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.