திருப்பூரில் தாய் திட்டியதால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

திருப்பூர் : திருப்பூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின். இவரது கணவர் சகாயராஜ் இவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தனது மகன்கள் இருவருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது இளைய மகன் சார்லஸ் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சார்லஸ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அவரது பள்ளி ஆசிரியர் சார்லஸின் தாயார் ரோஸ்லினை அழைத்துக் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு கோபமடைந்த ரோஸ்லின், சார்லசை கடுமையாக திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த சார்லஸ், வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற பல்லடம் காவல்துறையினர் சார்லஸின் உடலை பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூரில் தாய் திட்டியதால் மனமுடைந்த 12ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...