கோவை : கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது
கோவை : கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு இன்று காலை 5:30மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட வீரர்களின் உயரம், எடை, மார்பகம் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ரன்னிங் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த உடற்தகுதித் தேர்வில் மொத்தம் 73 பேர் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் 43 பேரும், பெண்கள் 9 பேரும் என மொத்தம் 52 பேர் இன்று தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வானது ஊர்க்காவல் படை இணை அதிகாரி மற்றும் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், பிரதேச தளபதி டீ.கே. தனசேகர் மற்றும் உதவி தளபதி தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் மற்ற தகுதிகளின் அடிப்படையில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.
தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு இன்று காலை 5:30மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட வீரர்களின் உயரம், எடை, மார்பகம் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ரன்னிங் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த உடற்தகுதித் தேர்வில் மொத்தம் 73 பேர் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் 43 பேரும், பெண்கள் 9 பேரும் என மொத்தம் 52 பேர் இன்று தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வானது ஊர்க்காவல் படை இணை அதிகாரி மற்றும் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், பிரதேச தளபதி டீ.கே. தனசேகர் மற்றும் உதவி தளபதி தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் மற்ற தகுதிகளின் அடிப்படையில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.