உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு

திருப்பூர் : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருப்பூர் : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திரிமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 52.97 அடி நீர்மட்டம் உள்ளது. திரிமூர்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக, தண்ணீர் கொண்டு வந்து திரிமூர்த்தி அணையை நிரப்புவது வழக்கம். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை கடுமையாக பொழிந்ததன் காரணமாக, பரம்பிகுளம் அணையிலிருந்து உபரிநீா் வினாடிக்கு 840 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு திறந்து விடப்பட்டது.

இதேபோல், திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாகவும், திருமூா்த்தி அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. 

அதன்படி, இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் அணையிலிருந்து வினாடிக்கு 950 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தனர். இதனால், பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...