உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, சபரிமலையில் இதுவரை 10 இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, சபரிமலையில் இதுவரை 10 இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, சபரிமலையை நோக்கி பெண்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கடும் கொந்தளிப்படைந்த கேரளாவைச் சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், பதட்டமான நிலையே தொடர்கிறது.

பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த சசிகலா (46) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் சபரிமலைக்கு வந்தார். இருமுடிக்கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காண்பித்து குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ததாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பின் சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு தெரிவிக்கும் என்றும், மேலும், பல இளம் பெண்கள் சன்னிதானத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, சபரிமலையை நோக்கி பெண்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கடும் கொந்தளிப்படைந்த கேரளாவைச் சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், பதட்டமான நிலையே தொடர்கிறது.

பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த சசிகலா (46) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் சபரிமலைக்கு வந்தார். இருமுடிக்கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காண்பித்து குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ததாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பின் சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு தெரிவிக்கும் என்றும், மேலும், பல இளம் பெண்கள் சன்னிதானத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.