காலம் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்றாத தோடர் இன மக்கள் : பாரம்பரிய நடனத்துடன் வில், அம்பு திருமண சாஸ்திர நிகழ்ச்சி

நீலகிரி : உதகையை அடுத்த காஷ் மந்து பகுதியில் பழங்கால முறைப்படி பாரம்பரிய நடனத்துடன் கூடிய தோடர் இன மக்களின் வில், அம்பு திருமண சாஸ்திர நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி : உதகையை அடுத்த காஷ் மந்து பகுதியில் பழங்கால முறைப்படி பாரம்பரிய நடனத்துடன் கூடிய தோடர் இன மக்களின் வில், அம்பு திருமண சாஸ்திர நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், இருளர், குறும்பர், தோடர் என பல்வேறு மலைவாழ் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் 21-ம் நூற்றாண்டிலும் தங்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இன்றும் மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களின் கோவில் திருவிழாக்களும், திருமணங்களும் பழங்கால பாரம்பரியபடியே நடந்து கொண்டிருப்பதும் ஆச்சரியமான ஒன்று தான். 



இதில், தோடர் இன மக்கள் தங்களது திருமணம் மற்றும் வளைகாப்பும் அவர்கள் முன்னோர்களின் வழிப்படி இன்றும் கடைபிடித்து வருகின்றனர். மணமகனை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பூ சங்கரா என்ற இயற்கை செடியை கொண்டு வில், அம்பு செய்து ஊர்வலமாக வந்து தங்களது முன்னோர்களை தெய்வமாக வழிபட்டு மணமகளுக்கு வில், அம்பை அளிக்கின்றனர்.



நேற்று நடைபெற்ற வில், அம்பு சாஸ்திரம் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மந்து பகுதிகளில் உள்ள அனைத்து தோடர் இன மக்களும் கலந்து கொண்டு, மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்தினர். பின்னர், அவர்களது பாரம்பரிய நடனத்துடன் வில், அம்பு திருமண சாஸ்த்திர நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், மணமகன் உதில் குட்டன், தனது துணையான ஜெயஸ்ரீ-க்கு வில், அம்பு வழங்கி தன்னுடைய வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் தோடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...