பேருந்தை தாக்கவிடாமல் தடுத்த களியக்காவிளை எஸ்.ஐ.,க்கு குவியும் பாராட்டுகள்

கன்னியாகுமரி : பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டிய காவல்துறை அதிகாரியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

கன்னியாகுமரி : பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டிய காவல்துறை அதிகாரியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. 

சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் ஐயப்பனைத் தரிசித்ததை கண்டித்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. தொடர் போராட்டங்களும், முழு கடையடைப்பும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வர போலீசார் முயன்று வருகின்றனர். 

இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தை மறித்த பா.ஜ.க கட்சித் தொண்டர்கள் பேருந்தையும், ஓட்டுநரையும் தாக்க முயன்றனர். களியக்காவிளை போலீசார் கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். 

ஆனால், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஆத்திரத்தில் பேருந்தை அடித்து நொறுக்க முயன்றனர். இதையடுத்து, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் பா.ஜ.க கட்சியினரை மிரட்டினார். எஸ்.ஐ மோகனைப் பார்த்து மிரண்டுபோன கட்சித் தொண்டர்கள் இடத்தைக் காலிச் செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வெகுவான வரவேற்பைப் பெற்று வருகிறது. 

மேலும், இந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களைத் தடியடி நடத்தாமலேயே விரட்டியடித்தற்காக எஸ்.ஐ மோகனை வெகுவாகப் பாராட்டினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...